ஹட்டனில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியில் பயணித்த ஒருவரை மோதி ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவரும் குறித்த நபரும் காயமடைந்து கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து (19) நேற்று அட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் குடாகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தேயிலைத் தோட்டத்தில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த குறித்த நபர், கவனக்குறைவாக பிரதான வீதியில் கடக்க முயன்றபோது, ஓடும் மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியதில், குறித்த நபர் சிறிது தூரம் தூக்கி வீசப்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து குறித்து ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment