சிறப்பாக நடைபெற்ற செட்டிபாளையம் சிவனாலய மகா கும்பாபிஷேகம்!



வி.ரி. சகாதேவராஜா-
ட்டக்களப்பு செட்டிபாளையம் சிவன் ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்று (9) ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

கடந்த 05 ஆம் தேதி புதன்கிழமை கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகி
எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் 7 ஆம் 8 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நேற்று 09 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தமூர்த்தி குருக்கள் முன்னிலையில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.ஜனார்த்தனன் சர்மா தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சித்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

தொடர்ந்து மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று 20 ஆம் தேதி 1008 சங்காபிஷேகத்துடன் நிறைவடையும் என ஆலய பரிபாலன சபையின் செயலாளர் ம.புவிதரன் தெரிவித்தார்.










எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :