அண்மையில் வெளியாகிய ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்களின் பிள்ளைகளுக்கு கௌரவமும் அன்பளிப்புகளும் வழங்கி கௌரவித்த நிகழ்வு; தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சி.எம். அஹமட் முனாஸ் தலைமையில் 2025.02.07 ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் அஷ்ரப் ஞாபகார்த்த நூலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீத் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றியதுடன் மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்தார்.
நிகழ்வின் கௌரவ அதிதிகளாக பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் அவர்களும் சிரேஷ்ட உதவி நூலகர் எம்.சி.எம். அஸ்வர் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் விஷேட அதிதியாக SEUEOU வின் தலைவரும் சிரேஷ்ட உதவி நிதியாளருமான எஸ்.எல்.எம். தாஹிர் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்.
ஊழியர் சங்கத்தின் செயலாளர் எம்.எம். முகம்மது காமில் அவர்களது பங்களிப்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஊழியர் சங்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்கள் சித்தியடைந்த மாணவர்களின் பெற்றோர் என பலரும் பங்கு கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment