தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்களின் ஒன்றுகூடல்!



லங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள், வளாகங்களின்; உபவேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்கள் அங்கம் வகிக்கும் Committee of Vice-Chancellors & Directors (CVCD) எனும் அமைப்பின் 483 ஆவது ஒன்றுகூடல் 2025.02.08 ஆம் திகதி, அமைப்பின் தற்போதைய தலைவரும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தருமான சிரேஷ்ட பேராசிரியர் பி.எம்.சி. திலகரத்ன தலைமையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் உள்ளிட்ட ஏனைய பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் மற்றும் வளாகங்களின் பணிப்பாளர்கள், நேரடியாகவும் நிகழ்நிலையூடாகவும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில், பல்கலைக்கழகங்களும் வளாகங்களும்  எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் குறித்த நிறுவனங்களை முன்கொண்டு செல்வதில் பின்பற்றப்படவேண்டிய முன்னெடுப்புகள், பரிந்துரைகள் தொடர்பில் விவாத்திக்கப்பட்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்வின் இறுதியில் அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சில பகுதிகளை உபவேந்தர்கள் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டதுடன்; பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகளையும் சந்தித்து உரையாற்றினர்.

Committee of Vice-Chancellors & Directors (CVCD) யின் 483 ஆவது ஒன்றுகூடலுக்கான ஏற்பாடுகளை தென்கிழக்கு பல்கலைக்கழகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.






























எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :