ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் மாணவர்களுக்கு மடி கணனி அன்பளிப்பு



பாறூக் இஸ்ஸாம்-
ஹா
ஷிம் உமர் பௌண்டேசன் பல்வேறு சமூக சமயப் பணிகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் மாணவர்களுக்கு உதவும் வகையில் "கல்விக்குக் கைகொடுப்போம்" என்ற திட்டத்தின் கீழ் இலவசமாக மடி கணினி வழங்கும் வேலைத்திட்டத்தையும் முன்னெடுத்துள்ளது.

அதற்கிணங்க 09 ஆம் கட்ட விநியோகம் கடந்த 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில் இடம்பெற்றது.

ஹாஷிம் உமர் பௌண்டேசனின் ஸ்தாபகரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்னாள் ஆலோசகருமான புரவலர் ஹாஷிம் உமர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மடி கணினி பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்தவர்களுள் நடுவர் குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பேருக்கு புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் மடி கணினிகளை வழங்கி வைத்தார்.

இதன்போது எம்.எஸ்.எப்.சுமையா-கந்தப்பொல, எம்.என்.எப். அஸ்ஸா-திஹாரிய, கே.டி.ஆர்.ஷெஹானி பெரேரா -- கொழும்பு-05, ரி.தௌஹீதா-புதிய காத்தான்குடி மற்றும் எஸ்.அமிதா நந்தனி-தெரணியகல ஆகியோர் மடி கணினிகளைப் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் தினகரன் பிரதம ஆசிரியர் தே.செந்தில் வேலவர், சிரேஷ்ட ஊடகவியலாளர் ராதா மேத்தா,சமூகஜோதி ரபீக், ஊடகவியலாளர் அமீர், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
















எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :