கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளராக எம்.ஏ.சீ.றமீஸா கடமையேற்றார்.



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக எம்.ஏ.சீ.றமீஸா இன்று (10/02/2025) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எம்.எச்.எம்.றுவைத், கணக்காளர் ஏ.மோகனகுமார், நிருவாக உத்தியோகத்தர் எம்.தாஹிர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பஷீர் ஆகியோரும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளராக கடமையாற்றிய எஸ்.எச்.முஸம்மில் ஏறாவூர் நகர்பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றதை ஏற்பட்ட வெற்றிடத்திற்கே எம்.ஏ.சீ.றமீஸா பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :