இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் தேவையுடைய 19 மாணவர்களுக்கு அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு நிதியுதவி வழங்கிய நிகழ்வு, 2025.03.24 ஆம் திகதி கலை கலாச்சார பீடத்தின் கேட்போர் கூடத்தில் பீடத்தின் சமூக தொடர்புகளுக்கான இணைப்பாளரும் சமூகவியல் துறையின் விரிவுரையாளருமான லும்னா நூஹுவின் தலைமையில் இடம்பெற்றது.
கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸிலின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலைவாணி தயாபரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கான உதவுதொகையை வழங்கிவைத்தார்.
பெண்கள் நலன் தொடர்பில் பணியாற்றிவரும் குறித்த அமைப்பு பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் தேவையுடைய ஆண் மாணவர்களையும் இணைத்துக்கொண்டிருந்தது விஷேட அம்சமாகும்.
கலை கலாச்சார பீடத்தின் சிரேஷ்ட உதவிப்பதிவாளர் எம்.ரீ.ஏ. அஷ்ஹரின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு திணைக்களங்களின் தலைவர்களான எம்.எஸ். பாத்திமா பயாஷா மற்றும் எஸ். சந்திரகுமார் உள்ளிட்டவர்களுடன் விரிவுரையாளர்கள் உதவி பெற்ற மாணவர்கள் என பலரும் பங்கு கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment