சாய்ந்தமருது ஹிதாயா பள்ளிவாசலில் விஷேட இப்தார்



அஸ்லம் எஸ்.மெளலானா-
சாய்ந்தமருது மஸ்ஜிதுல் ஹிதாயா பள்ளிவாசலில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விஷேட இப்தார் நிகழ்வு வியாழக்கிழமை (13) நடைபெற்றது.

பள்ளிவாசல் தலைவர் நிர்வாக சபைத் ஏ.எம். நௌபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இதன்போது பள்ளிவாசல் பேஷ் இமாம் ஜினான் மெளலவி றமழான் நோன்பு தொடர்பான சிறப்புரையை நிகழ்த்தியதுடன் விசேட துஆப் பிரார்த்தனையையும் மேற்கொண்டார்.
இந்த நிகழ்வில் உலமாக்கள், பள்ளிவாசல் நிருவாகத்தினர் மற்றும் பிரமுகர்கள் உட்பட மஹல்லாவாசிகள் பலரும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :