ஒன்றியத்தின் செயலாளர் எம்.எம். உதுமாலெப்பையின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.எம். இப்னு அஸார் பிரதம அதிதியாகவும் சாய்ந்தமருது மாளிகைக்காடு வரத்தக சங்கத்தின் தலைவரும் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் உபதலைவரும் முபாறக் டெக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான அல் ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக், ஒன்றியத்தின் ஆலோசகரும் நீதிக்கான மையத்தின் தலைவருமான சட்டத்தரணி சௌபி எச். இஸ்மாயில், சாய்ந்தமருது மாளிகைக்காடு உலமா சபையின் தலைவர் ஏ.எம். சலீம் (சர்கி) மற்றும் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் விசேடமாக சாய்ந்தமருது 17பிரிவுகளின் கிராம சேவை உத்தியோகத்தர்களும் , எம்.எஸ்.எம். நளீம் AO /GN அவர்களும் கலநாது கொண்டதுடன் சமாதான நீதவான்கள் இன் பிரிவு வாரியாக சமாதான நீதவான்களின் விபரங்கள் கொண்ட கோழைகள் வழங்கப்பட்டன.
இப்தார் விஷேட பயான் உரையை அஷ்செய்க் ஏ.எம்.ஏ. ஜப்பார் அவர்கள் நிகழ்த்தினார்.
நிகழ்வில் சாய்ந்தமருது சமாதான நீதவான்கள் ஒன்றியத்தின் அங்கத்தினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment