கல்முனை மாநகர சபையின் கணக்காளராக அஹ்சன் கடமையேற்பு



அஸ்லம் எஸ்.மௌலானா-
ல்முனை மாநகர சபைக்கான நிரந்தர கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.எஸ். மனாசிர் அஹ்சன், தனது கடமைகளை இன்று செவ்வாய்க்கிழமை (18) மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி, நிதி உதவியாளர் யூ. எம். இஸ்ஹாக் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

கல்முனை மாநகர சபைக்கு கடந்த ஒரு வருட காலமாக நிரந்தர கணக்காளர் ஒருவர் இல்லாதிருந்த நிலையில் கிழக்கு மாகாண பிரதம செயலாளரினால் இவர் இப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

இதற்கு மேலதிகமாக காத்தான்குடி நகர சபைக்கான பதில் கணக்காளராகவும் மனாசிர் அஹ்சன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :