பிரதேச சபை விதித்துள்ள வரிகளை குறைப்பதே திட்டம் ! மக்களுக்கு நிச்சயம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பேன் ! தலைமை வேட்பாளர் நளீர் அபூபக்கர்



நாவிதன்வெளி பிரதேச சபை தேர்தல் சுயேட்சை 1 தலைமை வேட்பாளர்.

நாவிதன்வெளி பிரதேச சபை அதிக வரிச் சுமையை மக்களுக்கு விதித்துள்ளது. இது ஒரு பாரிய அநீதி. பிரதேச சபை அதிகாரத்தை மக்கள் எனக்கு வழங்கினால் நிச்சயம் இவைகளுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கப்படும்.

நாவிதன்வெளி பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை குழு 1( உதைபந்து சின்னம் ) தலைமை வேட்பாளர் நளீர் அபூபக்கர் - இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாவிதன்வெளி பகுதியில் 4 இறைச்சி கடைகள் உள்ளன. கேள்வி மனு பல இலட்சமாக உள்ளது. இதனை குறைத்தால் ஒரு கிலோ இறைச்சியை 1800 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும். வீணாக மக்கள் மீது அதிக வரிச்சுமை பிரயோகிக்கப்பட்டுள்ளது.

நாவிதன்வெளி பிரதேச சபை அதிகாரம் எமது குழுவுக்கு கிடைக்கும் பட்சத்தில் ஒரு மாதகால இடைவெளிக்குள் இவற்றுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பேன்.

திருமண மண்டபத்துக்கும் அதிக வரி. ஒரு திருமணத்துக்கு 50 ஆயிரம் ரூபா அறியப்படுகின்றது. இதுவும் நிவர்த்தி செய்யப்படும் என்றும் நளீர் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :