சமூகங்களை ஒன்றிணைத்த தென்கிழக்குப் பல்கலைக்கழக இப்தார் நிகழ்வு!



தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீட முஸ்லிம் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த சமூகங்களை ஒன்றிணைக்கும் விதத்திலான இப்தார் நிகழ்வு, முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீட முற்றலில் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா தலைமையில் 2025.03.18 ஆம் திகதி இடம்பெற்றது.

நிகழ்வுக்கு கௌரவ அதிதிகளாக கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் மற்றும் பதில் பதிவாளர் எம்.ஐ.நௌபர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் மாணவர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கு கொண்டிருந்த இந்நிகழ்வுக்கு பிரதம பேச்சாளராக நளீமியா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அஷ் செய்க் ஏ.பி.எம். அப்பாஸ் (நளீமி) அவர்கள் கலந்துகொண்டு சிங்களத்திலும் தமிழிலும் உரையாற்றினார்.

நிகழ்வின்போது வரவேற்புரையை முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் முஸ்லிம் பிரிவு தலைவர் எம்.ஏ.எம். ஆஷிப் நிகழ்த்தியதுடன் பல்கலைக்கழகத்தின் நிதியாளர் சி.எம். மங்கள வன்னியாராச்சி உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.

எம்.யூ. பாத்திமா நிகாபா நிகழ்வுகளை தொகுத்து வழங்கியதுடன் முஸ்லிம் பிரிவின் உபசெயலாளர் எம்.ஏ.எம். அர்சாட் நன்றியுரை நிகழ்த்தினார். சமூகங்களின் ஒற்றுமையையும் அன்னியோன்யத்தையும் பறைசாற்றும் விதத்தில் மேடை நாடகமும் அரங்கேற்றப்பட்டிருந்தது.

இங்கு முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீட முஸ்லிம் சமூகம் சார்பில் பீடாதிபதி பேராசிரியர் முஸ்தபாவுக்கு நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் நிர்வாக உத்தியோகத்தர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





















































 

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :