அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்த மனித உரிமைகள், பெண்கள் உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவம் தொடர்பிலான செயலமர்வு பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடத்தின் கேட்போர் கூடத்தில் கடந்த 2025.03.21 ஆம் திகதி அமைப்பின் தலைவி கலைவாணி தயாபரன் தலைமையில் இடம்பெற்றது.
பீடத்தின் சமூக தொடர்புகளுக்கான இணைப்பாளரும் சமூகவியல் துறையின் விரிவுரையாளருமான லும்னா நூஹுவின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நிகழ்வுக்கு வளவாளராக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஏ.எல். இஸ்ஸடீன் கலந்து கொண்டு பெண்கள் எதிர்நோக்கும் சவால்களும் அவைகளைக் கையாள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பிலும் உரையாற்றினார்.
கலை கலாச்சார பீட திணைக்களங்களின் தலைவர்கள் விரிவுரையாளர்கள் மாணவர்கள் என பலரும் நிகழ்வில் பங்கு கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment