அரசின் வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகள் வெளிவந்துள்ள நிலையில்; அதனை ஆராய்ந்த பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில்; தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்த ஒருமணிநேர அடையாள வேலை நிறுத்தம் பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தொகுதிக்கு முன்பாக 2025.03.04 ஆம் திகதி நண்பகல் 12.00 முதல் 01.00 வரை சங்கத்தின் உப தலைவர் ஏ.எல்.எம். ஹஸ்மிர் தலைமையில் இடம்பெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த போதே செயலாளர் மேற்படி கருத்துக்களை தெரிவித்தார். எம்.சி.ஏ. கொடுப்பனவு 45%வீதத்திலிருந்து 36% வீதமாக குறைக்கப்பட்டுள்ளதகவும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுவந்த 20% வீத சிறப்பு உதவித்தொகை முழுமையாக இல்லாமலாக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக கொடுப்பனவிலும் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
2011 ஆம் ஆண்டு 25000 ஆக இருந்த மாணவர்தொகை இப்போது 43000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அந்த அளவுக்கு ஊழியர்களின் தொகை அதிகரிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
பல்கலைக்கழக நிர்வாக கட்டிடம் முன்பாக கூடிய ஊழியர்கள் நியாயம் கோரி ஊர்வலமாகவும் சென்றனர்.
0 comments :
Post a Comment