புனித ரமழானை வரவேற்று நோன்பை வரவேற்று ஐக்கிய மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஏ.சி.ஏஹியாகான் விடுத்துள்ள செய்தி



புனித ரமழானை வரவேற்று நோன்பு நோற்றியிருக்கின்ற இலங்கைவாழ் முஸ்லிம்கள் இன மத பேதங்களை மறந்து இன ஒற்றுமையாக வாழ்வதற்கு இம்மாதத்தில் பிரார்த்திக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஏ.சி.ஏஹியாகான் தெரிவித்தார்

புனித நோன்பு மாதம் ஆரம்பமாவதையிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

அச்செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

ஏழை மக்களின் பசியை எல்லோரும் உணரச் செய்கின்ற புனித ரமழானில் இன சௌஜன்யம், சகோதரத்துவம், இன ஐக்கியம் என்பவற்றை பேணி நடப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ள ஒரு மாதத்தில் நாங்கள் இவற்றுக்கான முயற்சிகளை செய்ய முன்வர வேண்டும்.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் எப்பொழுதும் ஐக்கியத்தையும், சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் விரும்புகின்றவர்கள். அந்த வகையில் இந்த ரமழான் மாதத்தையும் அதற்காக அவர்கள் பயன்படுத்துவதோடு எதிர்காலத்தில் ஐக்கியமிக்க இலங்கையை கட்டி எழுப்புவதற்கான பங்களிப்புகளை மேலும் காத்திரமான பணிகளாக மாற்றுவதற்கு முஸ்லிம் கல்விமான்களும், முஸ்லிம் தலைவர்களும் திடசங்கற்பம் பூண வேண்டும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் ஏழை மக்களின் துயர் நீங்கவும் அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும் நிம்மதியாக வாழவும் இந்த ரமழானில் நாம் எல்லோரும் பிரார்த்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :