ஹாஷிம் உமர் பௌண்டேசன், பல்வேறு மக்கள்நல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்த அடிப்படையில் மாணவர்களின் கல்வி நலனுக்கு மிகவும் பிரதானமாக தேவைப்படும் மடிக்கணினிகளை "கல்விக்கு கைகொடுப்போம்" எனும் திட்டத்தின்கீழ் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் 10ஆவது கட்ட விநியோகம் இன்று 06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில் இடம்பெற்றது.இதன்போது எம்.எச்.சீ.என்.ஹம்தா -- வெலிகம,எம்.ரீ. மபாஸிர் -- ஓட்டமாவடி-02, எம்.ஐ.எப். நிஹா- மருதமுனை -06, அமிதா நந்தனி-உடபொல தோட்டம், தெரணியகல மற்றும் எப்.எப்.நதா -- காத்தான்குடி-01 ஆகியோர் புரவலரிடமிருந்து மடிக் கணினிகளைப் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் அகில இலங்கை மலையக மன்றத் தலைவி திருமதி சன்முகப்பிரியா, வசந்தம் தொலைக்காட்சி செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, சமூகஜோதி ரபீக், அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆகிப் மொஹம்மட்,தொழிலதிபர் வாஜித், பெற்றோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment