சாய்ந்தமருது சமூர்த்தி வங்கி கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
சாய்ந்தமருது சமூர்த்தி வங்கி கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு சமூர்த்தி வங்கி கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் (11) நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந் நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சாய்ந்தமருதில் உள்ள 17 பிரிவுகளின் கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டைகளை வழங்கி வைத்தார்.
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம் மற்றும் சமூர்த்தி வங்கி முகாமையாளர் ஐ.எல்.எஸ். ஹிதாயா உட்பட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வங்கி கட்டுப்பாட்டுச் சபையின் சங்கத் தலைவர்கள் உட்பட சங்க உறுப்பினர்கள் 17 பேருக்கு இந்த அடையாள அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டன.

சமூர்த்தி வங்கிக்குப் புதிதாக தெரிவு செய்யப்பட்ட கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகள் இவ்வாண்டின் (2025) முதலாவதாக
அம்பாறை மாவட்டத்திலேயே அதிலும் சாய்ந்தமருது சமூர்த்தி வங்கி கட்டுப்பாட்டுச் சபையின் உறுப்பினர்களுக்கே வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிட்டத்தக்கது.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :