சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இலவச மருத்துவ முகாம்.



சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலை புதிய நிருவாகம் கையேற்றதன் பின்னர் பல்வேறு அதிரடி செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வரிசையில் இரத்த அழுத்தம், இரத்தத்தில் சீனியின் அளவு, மிகையான உடற்பருமனை அளவிடுவது மற்றும் வைத்திய ஆலோசனைகள் வழங்கும் இலவச மருத்துவ முகாம் பள்ளிவாசல் வளாகத்தில் 2025.04.14 ஆம் திகதி நம்பிக்கையாளர் சபைத் தலைவர் டொக்டர் சனூஸ் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரியபள்ளிவாசலின் செயலாளரும் பொறியியலாளருமான எம்.எம்.எம். முனாஸின் வழிகாட்டலில் இடம்பெற்ற இன்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் கலந்து கொண்டார்.

சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் தலைவரும் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் உப தலைவரும் முபாறக் டெக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான எம்.எஸ். முபாறக் உள்ளிட்ட நம்பிக்கையாளர்சபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற குறித்த இலவச மருத்துவ முகாமுக்கு சாய்ந்தமருது வைத்தயசாலை வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை சார்ந்த பலர் தங்களது பங்களிப்பை செய்திருந்தனர்.

இடம்பெற்ற மருத்துவ முகாமில் பிரதேச மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.






















 









எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :