கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம்: சாய்ந்தமருது பொதுவிளையாட்டு மைதானம் புனர்நிர்மாணம் செய்து வைப்பு



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
ண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதிப்புள்ளாகி, பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேசத்தில் அமைந்துள்ள பொது விளையாட்டு மைதானம்
கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று (02) புதன்கிழமை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பகுதிகளுக்கான அபிவிருத்திக் குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில் சீரமைக்கப்பட்டது.

கல்முனை மாநகர சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை ஆகியோரின் ஒத்துழைப்புடன் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, விளையாட்டு கழகங்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்ட இந்நிகழ்வில், கல்முனை மாநகர பொறியியலாளர் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை ஆணையாளர் உட்பட சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :