சாய்ந்தமருது பழைய தபாலக வீதியில் வடிகான் அடைத்து, மழைநீர் ஓட முடியாது தேங்கி நிலையிலும், நாற்றம் வீசக் கூடிய நிலையிலும் காணப்பட்டது. இதனால் அவ்வீதி உள்ள பொதுமக்கள் பல இன்னல்களை அனுபவித்தனர்.
கல்முனை மாநகர சபையினால் அவர்களின் இயந்திரங்களின் மூலமாக தேசிய மக்கள் சக்தியின் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டதின் கீழ்
சாய்ந்தமருது பழைய தபாலக வீதியில் உள்ள வடிகானை துப்பரவு செய்யும் பணி நேற்று (03) வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
மழை நீர் சீராக வழிந்தோட முடியாது காணப்பட்ட சாய்ந்தமருது பழைய தபாலக வீதியில் உள்ள வடிகானை சுத்தப்படுத்தியமைக்காக இதற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் அப்பிரதேச மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment