மாவட்ட ரீதியாக மருத்துவத்தில் முதலாம் நிலை பெற்று கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சாதனை !



நூருல் ஹுதா உமர்-
லங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியீடு செய்யப்பட்ட க.பொ.த (உ/த) பரீட்சை (2024) பெறுபேறுகளின் படி கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) யில் 10 மாணவிகள் மருத்துவ பீடத்துக்கு செல்ல தகுதி பெற்றுள்ளனர். இதில் மாவட்ட 1,4,28,35,37,43,49,60,63,67 ஆகிய நிலைகளை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவிகள் பெற்றுள்ளனர்.

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் நேற்று (26) வெளியீடு செய்யப்பட்ட க.பொ.த (உ/த) பரீட்சை (2024) பெறுபேறுகளின் படி கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மருத்துவ பீடத்துக்கு 10 மாணவிகளும், பொறியியல் பீடத்துக்கு 03 மாணவிகளும், உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பம் 16 மாணவிகளும், வர்த்தக பீடத்துக்கு 12 மாணவிகளும், முகாமைத்துவ பீடத்துக்கு 08 மாணவிகளும் கலை கலாசார பீடத்துக்கு 48 மாணவிகள் மற்றும் ஏனைய பீடங்கள் உள்ளடங்களாக சிறந்த சித்திகளைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கும் எமது பாடசாலைக்கு அதி சிறப்புச் சித்திகளை பெற்று பெருமை சேர்த்த மாணவிகளுக்கும், சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கு பல்வேறு நெருக்கடியான சூழ்நிலையிகளில் அனைத்து வழிகளிலும் வழிகாட்டியாக இருந்து செயற்பட்ட கல்லூரி முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS), பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், வகுப்பாசிரியர்கள், பாட ஆசிரியர்கள், மேலதிக கருத்தரங்குகள் கற்பித்த ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள், பெற்றோர்கள் அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :